Wednesday, April 25, 2012

தனிமையில் இனிமை

ஐந்து மணித் துளி கூட
தனித்து இருக்க முடிவதில்லை

அருகாமையில்
எப்போதும் மனிதர்கள்

மனிதர்கள் அருகில்  இல்லாவிட்டாலும்
பாடாய் படுத்தும்
செல் போன்கள் வேறு .

அலுவலக கெடுபிடி அழைப்புகள்
குடும்பத்தின் அவசர அழைப்புகள்
நேரம் காலம் தெரியாத சுற்றங்களின் அழைப்புகள் .

கொள்ளவும் முடியாமல்
தள்ளவும் முடியாமல்
தவிக்க வைக்கும்
"குடும்ப வாழ்க்கை"
போன்றாகிவிட்டது இந்த செல் போன் . 

எப்போதுதான் கிடைக்கும்
தனிமையில் இனிமை
 
ஒருநாள் ....
வயிற்றின் பாரம் அவசரப்படுத்த
கழிவறையில் இருக்கும் போது
"அப்பாடா! " என்று 
நிம்மதி பிறந்ததது .

யோசித்துப் பார்த்தேன்
எனக்குத் தெரிந்தவரை ...

மனிதன்  தனிமையில் 
நிம்மதி பெரும்  அறைகள் 

கருவறை.,

கழிவறை..,

கல்லறை .

இவை மட்டும்தான் எனத் தோன்றியது.

சரிதானா ?
 
 
 
 

No comments:

Post a Comment