ஐந்து மணித் துளி கூட
தனித்து இருக்க முடிவதில்லை
அருகாமையில்
எப்போதும் மனிதர்கள்
மனிதர்கள் அருகில் இல்லாவிட்டாலும்
பாடாய் படுத்தும்
செல் போன்கள் வேறு .
அலுவலக கெடுபிடி அழைப்புகள்
குடும்பத்தின் அவசர அழைப்புகள்
நேரம் காலம் தெரியாத சுற்றங்களின் அழைப்புகள் .
கொள்ளவும் முடியாமல்
தள்ளவும் முடியாமல்
தவிக்க வைக்கும்
"குடும்ப வாழ்க்கை"
போன்றாகிவிட்டது இந்த செல் போன் .
எப்போதுதான் கிடைக்கும்
தனிமையில் இனிமை
ஒருநாள் ....
வயிற்றின் பாரம் அவசரப்படுத்த
கழிவறையில் இருக்கும் போது
"அப்பாடா! " என்று
நிம்மதி பிறந்ததது .
யோசித்துப் பார்த்தேன்
எனக்குத் தெரிந்தவரை ...
மனிதன் தனிமையில்
தனித்து இருக்க முடிவதில்லை
அருகாமையில்
எப்போதும் மனிதர்கள்
மனிதர்கள் அருகில் இல்லாவிட்டாலும்
பாடாய் படுத்தும்
செல் போன்கள் வேறு .
அலுவலக கெடுபிடி அழைப்புகள்
குடும்பத்தின் அவசர அழைப்புகள்
நேரம் காலம் தெரியாத சுற்றங்களின் அழைப்புகள் .
கொள்ளவும் முடியாமல்
தள்ளவும் முடியாமல்
தவிக்க வைக்கும்
"குடும்ப வாழ்க்கை"
போன்றாகிவிட்டது இந்த செல் போன் .
எப்போதுதான் கிடைக்கும்
தனிமையில் இனிமை
ஒருநாள் ....
வயிற்றின் பாரம் அவசரப்படுத்த
கழிவறையில் இருக்கும் போது
"அப்பாடா! " என்று
நிம்மதி பிறந்ததது .
யோசித்துப் பார்த்தேன்
எனக்குத் தெரிந்தவரை ...
மனிதன் தனிமையில்
நிம்மதி பெரும் அறைகள்
கருவறை.,
கழிவறை..,
கல்லறை .
இவை மட்டும்தான் எனத் தோன்றியது.
சரிதானா ?
No comments:
Post a Comment