Tuesday, November 1, 2011

மழை

 கருமேகங்களின் ஓட்டத்தி்ல்  பிறந்த
 சுத்தமான - வியர்வை துளி.

 மண்  விண்ணுக்கு அனுப்பிய
கடிதத்தின் - காதல் பதில்.

விடுமுறை வேண்டும் மாணவனின்
கண்களின்  - சந்தோஷ வரம்.

மிச்ச  சொச்ச விவசாய நிலத்திற்கு
இறைவனின் - மானியம்.

பருவத்தில் பெய்யும் போது
அது - எதிர்பார்த்த காதலியின் வருகை.

பெய்தாலும் பொய்த்தாலும்
மக்கள்பொறுத்துக்கொள்ளும் -
ஆளும் கட்சி

மழையே நீ வாழ்க !




--------------------------------------------------------------

வாழ்க வளமுடன்.

 




No comments:

Post a Comment